இது குறித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மீனா கூறுகையில், இந்த வீடியோ குறித்து சம்மந்தப்பட்ட அவுட்சோர்சிங் காவலாளி கண்ணபிரானிடம் விளக்கம் கேட்டபோது, ரத்தத்தை பஞ்சால் துடைத்து அருகில் உள்ள குப்பை தொட்டியில் போட்டேன். நான் வேறு ஏதும் செய்யவில்லை என்றார். அது உங்கள் வேலை அல்ல என்று கூறி உடனடியாக அவுட்சோர்சிங் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். இங்கு கடந்த மாதம் செவிலியர் கண்காணிப்பாளர் ஷீலா நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.