10வது தேர்ச்சி மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்தவர்களும் உடனடியாக தொழிற் நிறுவனங்களிலும், ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு அரசு டாடா டெக்கனாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில்நுட்பத்துடன் உரிய ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளிலும் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஓராண்டு தொழிற்பயிற்சிகளான மெனபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் & ஆட்டோமேசன், இன்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மெனபேக்சரிங் டெக்னீஷியன் படிப்புக்கு 10, பிளஸ் 2, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
ஈராண்டு தொழிற் பிரிவுகளான பேசிக் டிசைனர் & விர்டியல் வெரிபையர் (மெக்கானிக்கல்), அட்வான்ஸ் சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன் படிப்புகளுக்கு 10, 12ம் வகுப்பு, ஏதாவது பட்டம் படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மாதம் ரூ.750 உதவி தொகை, என்ஐஎம்ஐ பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவி, 2 செட் சீருடைகள் தையல் கட்டணத்துடன், பஸ்பாஸ், ஷூ ஆகியவை தமிழ்நாடு அரசினால் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கி பயில விடுதி வசதி உண்டு. நேரடி சேர்க்கைக்கு துணை இயக்குனர்/ முதல்வர், அரசினர் ஐடிஐ, மின்ட், வடசென்னை என்ற முகவரில் நேரில் தொடர்பு கொள்ளலாம். 044-25209268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.