தேசிய மருத்துவ ஆணையம் எம்எஸ்ஆர் 2023 இளநிலை, முதுநிலை படிப்புகள் நடத்த தேவையான குறைந்தபட்ச அளவு மட்டும்தான். ஆனால் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலும் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது. ஆனால் தேவையான பணியிடங்களே உருவாக்காமல் செயற்கையாக மிகையான தோற்றம் உருவாகி வருகிறது எனக் கூறி, குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்கள் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு தர மறுப்பது எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.
இதனை அரசு உடனடியாக திரும்ப பெற்று விதிகளின் படி தேவைப்படும் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்த அரசாணை மூலம் எதிர்காலத்தில் அரசு பணியில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தரமான சிறப்பு சிகிச்சைகளும் சேவையும் பாதிக்கப்படும். எனவே அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இந்த அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.