41 பயணிகளுடன் பஸ், திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் வந்தபோது பின்னால் வந்த லாரி உரசியபடி சென்றது. உடனே டிரைவர் பஸ்சை இடதுபுறம் திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. 41 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.