Tuesday, September 17, 2024
Home » அரசு போக்குவரத்து கழகங்களில் பொது மேலாளர்கள் 5 பேர் பணியிட மாற்றம்

அரசு போக்குவரத்து கழகங்களில் பொது மேலாளர்கள் 5 பேர் பணியிட மாற்றம்

by Ranjith

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 5 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் 5 பொது மேலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 7 துணை மேலாளர்களுக்கு, முதுநிலை துணை மேலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட அராசாணையில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) கடலூர் மண்டலத்துக்கு பணியிட மாற்றம், அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) வேலூர் மண்டல பொது மேலாளர் எட்வின் சாமுவேல், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முதுநிலை துணை மேலாளராகவும், அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) கடலூர் மண்டல பொது மேலாளர் ராஜா, அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நாகப்பட்டினம் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) ஈரோடு மண்டல பொது மேலாளர் ஸ்வர்ணலதா, கோவை போக்குவரத்துக் கழக மனிதவள முத்த துணை மேலாளராகவும், அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) உதகை மண்டல பொது மேலாளர் கணபதி, அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) வேலூர் மண்டல பொது மேலாளர்களாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகர் போக்குவரத்துக் கழக துணை மேலாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி, மதுரை போக்குவரத்து கழக தொழில்நுட்பப் பிரிவு முதுநிலை துணை மேலாளர் மற்றும் பொது மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) துணை மேலாளர் பாலசுப்பிரமணியன் திருநெல்வேலி போக்குவரத்து கழக தொழில்நுட்பப் பிரிவு முதுநிலை துணை மேலாளராகவும், அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) துணை மேலாளர் சதீஷ்குமார் விழுப்புரம் போக்குவரத்து கழக தொழில்நுட்பப் பிரிவு முதுநிலை துணை மேலாளர் மற்றும் விழுப்புரம் மண்டல பொது மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர் சிவக்குமார், முதுநிலை துணை மேலாளாராக பதவி உயர்வு வழங்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) திருப்பூர் மண்டல பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல அரசு விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர் கலாவதி சேலம் போக்குவரத்து கழக தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) துணை மேலாளர் மணி, மதுரை போக்குவரத்து கழக பொது மேலாளராகவும், அரசு விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர் கந்தசாமி, அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) காரைக்குடி மண்டல பொது மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi