அதன்படி ஒவ்வொரு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்; தமிழ்நாடு முழுவதும் விரைவில் தமிழக அரசுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வுகள் நடத்தப்படும். மேலும், சாலை பாதுகாப்பு, கண் தானம், உடல் உறுப்பு தானம், பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு ல், உள்ளிட்டவை மையப்படுத்தி அதற்கும் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். இதேபோல ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் ஆளுமைகளுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும் என குறிப்பிட்டார்.