விபத்தில் அரசு ஊழியர் படுகாயம்

திருவள்ளூர்: திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஒன்றிய அரசின் ஐ.சி.எம்.ஆர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகளை திருவள்ளூரில் இயங்கும் தனியார் பள்ளியில் தனது குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று மணிகண்டன் ஓட்டிவந்த பைக்கின் வேகமாக மோதியது. இதில், அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்