10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமரால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: திருச்சி என்றாலே திருப்புமுனைதான்; திமுகவை தொடங்குவது என முடிவெடுத்தது திருச்சியில் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். நாற்பதுக்கு நாற்பதையும் நிச்சயம் வெல்வோம். பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல். 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமரால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தமிழகத்திற்கு செய்த சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடியால் பட்டியலிட முடியுமா? எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்