இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்போது, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், அது சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கடந்த 2015ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 8 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது. ஆனாலும், உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அரசுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தனர். 2007ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தி 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.