இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மே 12ம் தேதி 200 மீனவர்களையும், மே 14ம் தேதி 400 மீனவர்களையும் விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.