Sunday, July 7, 2024
Home » அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

சென்னை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காதராவுத்தூர் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வு, அரசு நிலம் தொடர்பான வழக்குகளில் முறையாக அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை மற்றும் வணிகவரித் துறை செயலாளர்கள் மூன்று மாதங்களில் உரிய சுற்றறிக்கைகள் அல்லது விதிமுறைகளை வகுத்து தெரிவிக்க வேண்டும். வழக்குகளை முறையாக நடத்தாத அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like

Leave a Comment

seventeen + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi