திமுக கட்சியே சனாதனத்தை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான். எங்களுக்கு ஆட்சியை பற்றி எல்லாம் கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரத்தை விட கொள்கையே முக்கியம். வருகிறவர் போகிறவர்கள் எல்லாம் எனது தலைக்கு விலை பேசுகிறார்கள். சனாதனம் தர்மம் ஒழிப்பு காரணமாக ஆட்சியே போனால் பரவாயில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் பேசாததை நான் பேசவில்லை.
மாநாட்டில் நான் பேசிய பேச்சு மட்டும் விமர்சனமாக்கப்படுகிறது. நான் பேசியதை எல்லாம் திரித்து பொய்யை பரப்பி வருகின்றனர். இது தான் அவர்களின் முழு நேர வேலை. என்னோட ஒரே கேள்வி அதிமுகவை பற்றியது தான். அதிமுக வில் அண்ணா பெயர் உள்ளது. அண்ணா தான் அதிக அளவில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியுள்ளார். அதிகமாக பேசியுள்ளார். சனாதன தர்மம் விவகாரத்தில் அதிமுகவினருடைய கருத்து என்ன? அதிமுக தலைவர்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன் என்றார்.