இரண்டு கடைகளில் ஆட்கள் உள்ளே இருந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயர்தப்பினர். பேருந்து மோதியதால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளதாக ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் அன்சாரி கூறினார். பஞ்சர் கடையில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் அப்பளமாக நொறுங்கியது. பஞ்சர் கடைக்கு ரூ.1லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பேருந்து மோதியதில் மேலமையூர் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது மனைவி சுபாஷினி (35) படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.