திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த கோட்டூர் தோட்டக்கலை உதவி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிமுக பிரமுகர் எல்லப்பனிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த தோட்டக்கலை உதவி அலுவலர் பாலதண்டாயுதம் சஸ்பெண்ட். பாலதண்டாயுதத்தை சஸ்பெண்ட் செய்து தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.