இந்த சட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், இந்திய தண்டனை சட்டத்தின் 353வது பிரிவு, பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 130 உடன் ஒத்திருக்கிறது. பணிக்கு இடையூறு என்ற பெயரில் இந்த சட்ட பிரிவு அரசு ஊழியர்களால் பரவலாக தவறாக பயன்படுத்தப்படுகிறது.
முந்தைய காலங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர்கள் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தண்டனையை குறைக்க வேண்டும்.எனவே பிரிவு 130 சட்டத்தின் கீழான தண்டனையை 2 ஆண்டில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.