இதையடுத்து பள்ளியின் ஆசிரியர் கணேசன், சின்டெக்ஸ் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தார். அப்போது தொட்டியில் உள்ள தண்ணீரில் மனித கழிவு கலந்திருப்பது தெரியவந்தது. இதனை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக சின்டெக்ஸ் தொட்டியின் தண்ணீரை வெளியேற்றினர். இதுகுறித்து தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார், பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் மற்றும் அலுவலர்கள், பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.