சென்னை: தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என மெய்யநாதன் தெரிவித்துள்ளார். வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் ஆலையை ஆய்வு செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது.நள்ளிரவில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.