டெல்லி: ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு பிரச்னை செய்து வருகிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. 15,000 கன அடியில் இருந்து 5,000 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டே வருகிறது. தற்போதைக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை மட்டும் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.