சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.20,000 லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.