சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில இதற்கு முன் விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5-ம் தேதி வரை TNGASA என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் சேர விரும்பினால், காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.