ஈரோடு : கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்துக்கு உட்பட்ட கரும்பாறை என்ற இடத்தில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது. உயர் அழுத்த மின்சார வேலியில் சிக்கி சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.சம்பவ இடத்தில் வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.