Saturday, July 6, 2024
Home » உடற்கல்வியால் உளவியல் நன்மைகள் உண்டாகும்

உடற்கல்வியால் உளவியல் நன்மைகள் உண்டாகும்

by Porselvi

நாம் அனைவருமே அன்றாடம் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக உடற்பயிற்சி என்ற வார்த்தையானது, உடற்தகுதி அல்லது அதிகபட்சமாக நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தரும் என்பது அனைவரின் புரிதலாக உள்ளது. ஆனால் உடற்பயிற்சி என்பது உடற்தகுதி, ஆரோக்கியத்தையும் தாண்டி ஒரு நல்ல ஆளுமையை உருவாக்க உதவுகிறது. இதில் பண்பு, பழக்கவழக்கங்கள், நடத்தை, நம்பகத்தன்மை, ஒழுக்கம் போன்றவை அடங்கும். மேலும் நம் உடலுடன் மனதை ஒருங்கிணைக்கவும் உதவும். ஆகையால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியானது மிக மிக அவசியமானதாகும். கல்வி செயல்திறனை மேம்படுத்துவதில் உடற்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்களின் நடத்தை மற்றும் பிற உடல்நலம் தொடர்பான சிக்கல்களை குறைத்து மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் நல்ல தலைமைத்துவ குணங்கள், முடிவெடுக்கும் மனப்பான்மை மற்றும் ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன் ஒரு குழு வீரராக நல்ல ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள் நேர்மறையான விளைவுகளை கல்வி செயல்திறனில் வெளிப்படுத்துகிறது. உடற்பயிற்சி உங்களை புத்துணர்ச்சி பெற செய்கிறது. உங்கள் மனநிலை புத்துணர்ச்சியடைகிறது. மேலும் உங்களுக்கு மேம்பட்ட நினைவாற்றலை வழங்கி சில சிக்கலான விஷயங்களில் தீர்வு காண்பதற்கான திறன்களுக்கு உதவுகிறது. உடற்கல்வியால் உண்டாகும் இந்த உளவியல் நன்மைகள் கல்வியில் சிறந்து விளங்க ஒருவருக்கு உதவுகிறது. விளையாட்டில் தீவிரமாக பங்கேற்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையில் நல்ல மற்றும் விரும்பிய பதவிகளைப் பெறுவதில் முன்னணியில் உள்ளனர்.உடற்கல்வியும் கல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறப்படுகிறது. இது குழந்தை பருவ வளர்ச்சியை வடிவமைக்க உதவுகிறது. உடற்கல்வி வளரும் மொட்டுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தருகிறது. ஒரு தனிநபரின் சமூக வாழ்க்கையை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கை, தகவல் தொடர்பு திறன், சமூக திறன்கள், நேர மேலாண்மை, புதுமை படைத்தல், சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது. உடற்கல்வி ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருவது மட்டுமல்லாமல், ஒருவரது வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi