தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை நேற்று முன்தினமும் விலை அதிகரித்து, சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 880க்கு விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வால், நகை வாங்க நினைத்தோர் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். விரைவில் ரூ.57 ஆயிரம் என்ற நிலையை தங்கம் எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு