கோவிந்தா…கோவிந்தா என்ற முழக்கம் விண்ணை முட்ட பச்சை பட்டுடுத்தி..ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்க குதிரை வாகனத்தில் ஏறி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாதல் விடிய விடிய வைகை ஆற்றங்கரையில் காத்திருந்த பக்தர்கள் கண் குளிர தரிசித்தனர். அழகர் ஆற்றில் இறங்கிய போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
வாராரு.. வாராரு.. அழகர் வாராரு..: தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் கம்பீரமாக இறங்கினார் கள்ளழகர்..!!
previous post