தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வேகமாக அதிகரிப்பதும், மெதுவாக குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.728 அதிகரித்தது. சென்னையில் தங்கத்தின் விலை நேற்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ரூ.5,706க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை இன்றும் ரூ.352 உயர்ந்து ஒரு பவுன் ரூ.46,000ஐ தொட்டது. ஒரு கிராம் ரூ. 44 உயர்ந்து ரூ.5,750க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.46 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதேபோன்று தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.