சென்னை: தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.53,000க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 28ம் தேதி சவரன் ரூ.53,328, 29ம் தேதி ரூ.53,480, ஜூன் 1ம் தேதி ரூ.53,480, 2ம் தேதி ரூ.53,520, 3ம் தேதி ரூ.53,560, 4ம் தேதி ரூ.54,080 என்றும் விலை அதிகரித்தது. 5ம் தேதி தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.54,080க்கு விற்கப்பட்டது. 6ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560க்கு விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 வரை உயர்ந்தது. இந்த தொடர்ந்து விலையேற்றம் நகை வாங்குவோரை கவலையடைய செய்து வந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால் அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்திருந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,400க்கும் விற்கப்பட்டது.