மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.54,280க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.54,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,785க்கு விற்பனையாகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,080க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,760க்கும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,785க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,280க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

Related posts

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: போலீஸ் வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர்தத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அம்மாபேட்டை அருகே லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரர் தற்கொலை