தங்க சுரங்கத்தை வெட்டி 5 சவரன் நகை தருவேன்: சுயேட்சை வேட்பாளர் ‘லகலக’

கோவை: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (72). கோவை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டி போடுகிறார். நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர், மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். இதுவரை எந்த வேட்பாளரும் சொல்லாத சிலவற்றை சொல்லி அவர் வெற்றி பெற்றால் அதனை செய்து காட்டுவதாகவும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நான் வெற்றி பெற்றால் நதி நீர் சரி செய்வேன். வளர்ந்த பெண்களுக்கு ஐந்து பவுன் நகை மற்றும் 50 சென்ட் இலவசமாக கொடுப்பேன்.

வீடுகளுக்கு தொங்கு தோட்டம் அமைத்துக் கொடுப்பேன். நீலகிரி மாவட்டம் தேவாலய பந்தலூரில் தங்க சுரங்கம் உள்ளது. அதில், இருந்து எடுத்து தங்கத்தை கொடுப்பேன். கர்நாடக பகுதி கோலார் தங்க சுரங்கத்தில் இருந்தும் தங்கம் எடுக்கப்படும். இங்கிலாந்து அரசு இரண்டு லட்சம் கிலோ தங்கத்தை திருடி சென்றுவிட்டனர். அந்த தங்கமும் மீட்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படும். என்னை வெற்றி பெற செய்தால் இதை எல்லாம் செய்வேன்’’ என கூறினார்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?