தங்க கடத்தல்: மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு

சென்னை: தங்கம் கடத்தல் தொடர்பாக மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பாஜக பிரமுகர் கடை சோதனைக்குள்ளான நிலையில் இத்தாலியா ஷூஸ், நேகா சில்க் ஆகிய கடைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை விமான நிலைய தங்கக் கடத்தல் சோதனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 207 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது அம்பலமானது. தங்கம் கடத்தல் தொடர்பாக youtuber சபீர் அலி உள்ளிட்ட 9 பேர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்