இந்நிலையில் அது தங்கத்தால் ஆன கிரீடம் அல்ல என்றும், செம்பில் தங்க முலாம் பூசப்பட்டது என்றும் புகார் எழுந்துள்ளது. நேற்று இந்த ஆலயத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சூர் மாநகராட்சி கவுன்சிலரான லீலா வர்கீஸ், புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து கவுன்சிலர் லீலா வர்கீஸ் கூறியது: லூர்து மாதாவுக்கு பல பவுன் எடையுள்ள தங்கக் கிரீடத்தை சுரேஷ் கோபி வழங்கியதாக தெரியவந்தது. ஆனால் அது உண்மையில் தங்கக் கிரீடம் அல்ல என்றும், செம்பில் தங்க முலாம் பூசப்பட்டது என்றும் பரவலாக அனைவரும் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் அந்தக் கிரீடத்தில் எத்தனை பவுன் தங்கம் உள்ளது என்று தெரிந்துகொள்ள அனைவரும் விரும்புகின்றனர். இது குறித்து ஆலய பாதிரியாரிடம் நான் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.