சென்னை: முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக பயண நாட்கள் தவிர்த்து, 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்படுகிறேன் என சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன். இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உகந்த மாநிலம் என்பதை எடுத்துரைக்க உள்ளேன். தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே நமது இலக்கு எனவும் கூறினார்.