சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் ஆலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செங்கல்பட்டில் ரூ.515 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலை நிறுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி ஆலை மூலம் 446 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.