உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து இந்திய கடலோர காவல்படையினர் 2 படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, சார்ட் சர்கியூட் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.