குளோபல் பள்ளி ஆண்டு விழா

சிங்கம்புணரி, ஏப்.20: சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டியில் உள்ள குளோபல் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி 7வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் பேராசிரியர் காந்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் சுரேகா சுந்தர் கலந்து கொண்டு பேசினார். இதில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் செய்து அசத்தினர். மேலும் ஜேஇஇ, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்வி மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற அறிவொளி பிரபாகரன் மாணவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி, மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி