சிங்கம்புணரி, ஏப்.20: சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டியில் உள்ள குளோபல் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி 7வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் பேராசிரியர் காந்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் சுரேகா சுந்தர் கலந்து கொண்டு பேசினார். இதில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் செய்து அசத்தினர். மேலும் ஜேஇஇ, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்வி மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற அறிவொளி பிரபாகரன் மாணவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி, மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
குளோபல் பள்ளி ஆண்டு விழா
previous post