போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லட்சுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: லட்சுமிக்கும், கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மாதவன் (45) என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மாதவனுக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்ததாக கருதிய லட்சுமி, அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார். மாதவன் அழைத்தும் பேசுவதில்லை.
ஆனால், மாதவன் தொடர்ந்து லட்சுமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற லட்சுமியை பின்தொடர்ந்து சென்ற மாதவன், ‘‘என்னுடன் பழகாத நீ வேறு யாருடனும் இனி பழகக் கூடாது. இத்தோடு செத்து போ’’ என்று கூறி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாதவனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் உள்ள லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.