காதலி திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் விஷம் குடித்து சாவு

தர்மபுரி: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கன்னிப்பட்டி அருகேயுள்ள வரகூரான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தங்கமணி (29). மாற்றுத்திறனாளியான இவர் பிஇ படித்து விட்டு கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

இந்த நிலையில் வேலையை விட்டு விட்டு தங்கமணி வீடு திரும்பினார். பின்னர் அவர் விவசாயம் செய்து வந்தார். இதனிடையே அவர் காதலித்து வந்த பெண், அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே தங்கமணி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த 26ம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இதுபற்றி கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்..!!

பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்: இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்