சிறுமி பயத்தில் கூச்சலிடவே, திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஸ்கரை பிடித்து, பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.