சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாயாருடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்த 38 வயது நபர், கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருவல்லிக்கேணியை சேர்ந்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு இழப்பீடாக ரூ7 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.