இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை 20 நாளாக ஓட்டல் அறையில் அடைத்து பலாத்காரம்: காமக்கொடூரனுக்கு வலை


திருமலை: இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை ஓட்டல் அறையில் 20 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பைன்சா கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி மாணவியான இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஐதராபாத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாம். இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே பழகி வந்த நிலையில் சிறுமியை சந்திக்க வேண்டும் என்று வாலிபர் கூறியுள்ளார். அதன்படி இருவரும் ஐதராபாத் வந்து சந்தித்துள்ளனர். அப்போது சிறுமியை வாலிபர் நாராயணகூடாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார்.

அங்குள்ள அறைக்கு சென்றபோது, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி சிறுமியிடம் உல்லாசமாக இருக்க வாலிபர் முயற்சி செய்துள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த சிறுமி அறையில் இருந்து வெளியே வர முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் கடந்த 20 நாட்களாக ஓட்டல் அறையிலேயே அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அறையின் கதவை பூட்டிவிட்டு வாலிபர் தலைமறைவானார். அப்போது ஓட்டல் ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவரது செல்போனில் இருந்து தனது பெற்றோருக்கு நடந்ததை கூறி சிறுமி அழுதுள்ளார்.

இதற்கிடையில் மகளை காணாமல் தவித்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு நேற்று போலீசார் உதவியுடன் உடனடியாக அங்கு விரைந்து சென்று மகளை மீட்டனர்.
இதுகுறித்து நாராயணகுடா போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய கொடூர வாலிபரை தேடி வருகின்றனர்.

Related posts

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு