சென்னை : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி.முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.