இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரின் காதலனை வலைவீசி தேடி வருகின்றனர். வேலூரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு, கீதா (46) என்ற மனைவியும், தேஜஸ்வின் (21) என்ற மகளும் உள்ளனர். ஆனந்தன் மகள் தேஜஸ்விக்கு 6 வயது இருக்கும்போது, மனைவி கீதாவிடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், ஆனந்தனின் மகள் தேஜஸ்வின், கேரளாவில் தங்கி பேஷன் டெக்னாலஜி படிப்பதாக கூறிவிட்டு, பாண்டிச்சேரியை சேர்ந்த காதலன் அஸ்வின் என்பவனுடன், ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரில் உள்ள ராயல் ஹோம் அப்பார்ட்மென்டில் தங்கி, பெருங்களத்தூரில் உள்ள பிரபலம் வாய்ந்த ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பெட்ரூமில் அரை நிர்வாண கோலத்தில் தேஜஸ்வின் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி போலீசாருக்கும், தேஜஸ்வின் அம்மா கீதாவுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேஜஸ்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த தேஜஸ்வின் காதலனை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்