சிறுமியை துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலைக்கு முயற்சி

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, கொட்டாம்பட்டி அருகே வெள்ளமலைப்பட்டியைச் சேர்ந்த செல்லம் (19) காதலித்து வந்துள்ளார். நத்தம் அருகே உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று செல்லம் வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை உறவினரது வீட்டில் தனியாக சந்தித்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி செல்லத்துடன் சிறுமி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் செல்லம், உறவினரது வீட்டிலிருந்த ஏர்கன்னை எடுத்து சிறுமியை சுட்டார்.

இதில் காயமடைந்த சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைக் கண்ட செல்லம், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக சிறுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், செல்லம் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது