பைக் மீது மோதியதில் தலை நசுங்கி சிறுமி பலி

சென்னை: சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு சாலையில், பைக் மீது லாரி மோதிய விபத்தில் சென்னை சிறுமி தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மணலியை சேர்ந்த விக்னேஷ் மகள் தன்சிகா (10). இவர் சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகேயுள்ள தனது மாமா நாகராஜ் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்துள்ளார்.

நேற்று மாலை சிவகங்கையில் இருந்து உறவினர் ஹரிணியுடன் பைக்கில் கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியதில் பின்புறம் அமர்ந்து வந்த தன்சிகாவின் தலை மீது லாரியின் பின்பக்க டயர் ஏறியது. இதில் தன்சிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை