நேற்று மாலை சிவகங்கையில் இருந்து உறவினர் ஹரிணியுடன் பைக்கில் கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியதில் பின்புறம் அமர்ந்து வந்த தன்சிகாவின் தலை மீது லாரியின் பின்பக்க டயர் ஏறியது. இதில் தன்சிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.