சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது


திருத்தணி: திருத்தணி அருகே, பட்டாபிராமாபுரம் ஊராட்சி மேல் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய பெருமாள் என்பவரின் மகன் சரவெடி சரத்(எ)சரத்குமார்(28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த 6ம் வகுப்பு படித்து வரும் சிறுமி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சரத்குமார் சிறுமியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மலர் தலைமுறைவாக இருந்த சரவெடி சரத்(எ)சரத்குமாரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது