சென்னை: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய, முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வைப்புநிதி பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், பயனாளியின் வண்ண புகைப்படம் உள்ளிட்ட விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களோடு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சிங்காரவேலனார் மாளிகை, 8 வது தளம் அலுவலகத்திலுள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.