இதற்கிடையே மேலும் 5 சிறுத்தைகள் திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வருவது வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தெரிய வந்தது. நேற்று காலை மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் பிடிபட்டது. இந்த சிறுத்தையை வனத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பிடித்து திருப்பதி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். இந்த சிறுத்தையின் முடி, உமிழ்நீர் போன்றவை சேகரித்து மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். முடிவுகள் வந்த பிறகே சிறுமியை கடித்து கொன்றது எந்த சிறுத்தை என தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.