ஒரு மாதம் கடந்து புகார் கொடுக்க காரணம் என்ன ? என்று போலீசார் கேட்டதற்கு, குற்றம் செய்தவர் முன்னாள் முதல்வர் என்பது மட்டும் அல்லாமல் சமூகத்தில் பெரியவராக இருப்பதால் பயம் மற்றும் அச்சம் காரணமாக தாமதமாக புகார் கொடுப்பதாக தெரிவித்தார். அதையேற்று கொண்ட போலீசார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் கூறும்போது,’இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஒரு பெண் வந்து புகார் கொடுத்துள்ளார். போலீசார் சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்றார்.
இந்நிலையில் எடியூரப்பா மீது மமதாசிங் கொடுத்துள்ள புகார் தொடர்பாக சதாசிவநகர் மற்றும் ஐகிரவுண்டு போலீசார் நேற்று காலை டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்வர் எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்று, புகார் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி சில விவரம் பெற்றனர். அதன்பின் விசாரணை தொடங்கினர். இதனிடையில் எடியூரப்பா மீதான போக்சோ புகார் வழக்கை சிஐடி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும் பொறுப்பை மாநில உள்துறை அமைச்சரிடம் ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளது. சிஐடியில் உள்ள பெண் போலீஸ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்துள்ளதாக தெரியவருகிறது.