அப்போது சிறுமிக்கு அத்தை பண ஆசை காட்டியதுடன் விலை உயர்ந்த செல்போன் வாங்கி தருவதாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு வாலிபரிடம் பணம் வாங்கிக்கொண்டு வேளச்சேரியில் உள்ள வீட்டில் தங்கவைத்து சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் அத்தையை இன்று அதிகாலையில் கண்ணகி நகரில் கைது செய்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
இதில் தெரியவந்திருப்பதாவது; 16வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கண்ணகிநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கடந்த 1ம் தேதி புகார் வந்துள்ளது. மறுநாள் 2ம்தேதி பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது சொந்த அத்தை இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. அத்தை தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பற்றி சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை சிறுமியின் அத்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சிறுமியின் தந்தையை போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் ஜாமீனில் வந்த சிறுமியின் தந்தை சிறுமியை அழைத்து கொண்டு சென்னை கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.