‘‘பணத்துக்காக பாசத்தை தொலைத்த கொடூரம்’’16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர அத்தை சிக்கினார்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கடந்த 1ம்தேதி 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவரது சொந்த அத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் வந்தது. பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில்,சென்னை அருகே செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த அந்த 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துள்ளார். பள்ளி விடுமுறை நாளில் கண்ணகி நகர் பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமிக்கு அத்தை பண ஆசை காட்டியதுடன் விலை உயர்ந்த செல்போன் வாங்கி தருவதாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு வாலிபரிடம் பணம் வாங்கிக்கொண்டு வேளச்சேரியில் உள்ள வீட்டில் தங்கவைத்து சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் அத்தையை இன்று அதிகாலையில் கண்ணகி நகரில் கைது செய்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

இதில் தெரியவந்திருப்பதாவது; 16வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கண்ணகிநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கடந்த 1ம் தேதி புகார் வந்துள்ளது. மறுநாள் 2ம்தேதி பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது சொந்த அத்தை இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. அத்தை தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பற்றி சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை சிறுமியின் அத்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சிறுமியின் தந்தையை போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் ஜாமீனில் வந்த சிறுமியின் தந்தை சிறுமியை அழைத்து கொண்டு சென்னை கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு