இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை சஞ்சீவ் கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தோலம்பாளையம் பகுதியில் இருந்த சிறுமியையும், பைக் மெக்கானிக் சஞ்சீவையும் நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் பைக் மெக்கானிக் சஞ்சீவ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.